Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமீரகத்துடன் இணைந்து இந்தியாவின் 2 கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சி

அமீரகத்துடன் இணைந்து இந்தியாவின் 2 கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சி

By: Nagaraj Thu, 10 Aug 2023 3:30:40 PM

அமீரகத்துடன் இணைந்து இந்தியாவின் 2 கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சி

புதுடில்லி: கூட்டுப்பயிற்சி... இந்தியாவின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் அமீரகத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து இந்திய கடற்படை ஜாயேத் தல்வார் என்று கூட்டு ஒத்திகை நடத்தி வருகிறது. இதற்காக இந்தியாவில் இருந்து விசாகப்பட்டினம், திரிகண்ட் ஆகிய இரண்டு கடற்படைக் கப்பல்கள் கடந்த 8ம் தேதி துபாய்க்கு சென்றுள்ளன.

naval officers,friendship,training,port area ,கடற்படை அதிகாரிகள், நட்புறவு, பயிற்சி, துறைமுகப்பகுதி

இந்த இரண்டு கப்பல்களும் துபாயில் உள்ள ரஷீத் துறைமுகப்பகுதியில் அந்நாட்டு கடற்படைக் கப்பல்களுடன் 3 நாட்கள் போர் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றன. நாளை இந்தப் பயிற்சி முடிவடைய உள்ளது.

இருநாட்டு கடற்படையின் நட்புறவை வலுப்படுத்தவும் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags :