Advertisement

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கொரோனா தோற்று பாதிப்பு

By: vaithegi Thu, 04 May 2023 4:27:04 PM

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கொரோனா தோற்று பாதிப்பு

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு ......

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே கொண்டே வருகிறது. இதனை அடுத்து தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதையடுத்து 3,720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,962 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,56,716- இருந்து 4,49,60,678 ஆக அதிகரித்து உள்ளது.

ஆனால் அதேநேரத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,873 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,92,828 -ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,177-லிருந்து 36,244 ஆக குறைந்துள்ளது.

Tags :
|