Advertisement

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கோவிட் பாதிப்பு

By: vaithegi Wed, 10 May 2023 12:05:22 PM

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கோவிட் பாதிப்பு

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,109 பேருக்கு கொரோனா தோற்று உறுதி .... இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே கொண்டே வருகிறது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

covid,india ,கோவிட் ,இந்தியா


ஆனால் தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,331 ஆக இருந்த கொரோனா தொற்று இன்று 2,109 ஆக சற்று அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,742 லிருந்து 21,406 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிழந்து உ ள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 5,31,707 லிருந்து 5,31,722 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,49,72,800 லிருந்து 4,44,21,781 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,66,84,570 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,055 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|