Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளுக்கு சிகிச்சை அளிக்க அலட்சியம்... தந்தை சாலைமறியல் செய்ததால் பரபரப்பு

மகளுக்கு சிகிச்சை அளிக்க அலட்சியம்... தந்தை சாலைமறியல் செய்ததால் பரபரப்பு

By: Nagaraj Sun, 16 July 2023 4:34:05 PM

மகளுக்கு சிகிச்சை அளிக்க அலட்சியம்... தந்தை சாலைமறியல் செய்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: சாலை மறியல் செய்ததால் பரபரப்பு... திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி வந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததாகக் கூறி குழந்தையின் தந்தை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் குழந்தைக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

medicine,father,picket with daughter,visitor,doctor,peace ,மருத்துவம், தந்தை, மகளுடன் மறியல், வந்தவாசி, டாக்டர், சமாதானம்

இதையடுத்து அவர் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார்.

அப்போது பணியில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு மருத்துவம் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் அரசு மருத்துவமனை எதிரே தனியாக மகளுடன் மறியலில் ஈடுபட்டார்.

அப்போது அரசு பேருந்தில் இருந்த இறங்கி வந்த நடத்துனர் மற்றும் பயணிகள் மருத்துவம் பார்க்காத மருத்துவரை கண்டித்து அங்கு இருந்த சேர்களை தூக்கி வீசினர். தகவலறிந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்

Tags :
|
|