Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலையான செமேரு எரிமலை வெடித்தது

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலையான செமேரு எரிமலை வெடித்தது

By: Nagaraj Mon, 05 Dec 2022 6:17:49 PM

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலையான செமேரு எரிமலை வெடித்தது

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை திடீரென வெடித்தது. இதனால், எரிமலையில் இருந்து தீ பரவத் தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் எரிமலைக் குழம்பு வெளியேறுகிறது

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை, செமேரு, கிழக்கு ஜாவா மாகாணத்தின் லுமாஜாங்கில் அமைந்துள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை திடீரென வெடித்தது. இதனால், எரிமலையில் இருந்து தீ பரவத் தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் எரிமலைக் குழம்பு வெளியேறுகிறது. சாம்பல் புகை 5,000 அடி உயரத்திற்கு எழுந்தது. அங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது.

east,java,province, ,எரிமலை, சாம்பல் புகை, ஜாவா

மிக மோசமாக பாதிக்கப்பட்ட சும்பர்வுலு மற்றும் சுபிது ரோங் கிராமங்களுக்கு மீட்புக் குழுக்கள் விரைந்தன. அங்கு, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிமலை குப்பைகளால் குவிந்தன. எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.

எரிமலை வெடிப்புகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சாம்பல் வெளியேற்றம் நேற்றை விட இன்று அதிகமாக உள்ளது. இதனால் மேலும் பல இடங்களில் சாம்பல் புகை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்ததில் 51 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|