Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முழு ஆண்டு தேர்வை தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது குறித்த தகவல்

முழு ஆண்டு தேர்வை தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது குறித்த தகவல்

By: vaithegi Tue, 11 Apr 2023 2:26:32 PM

முழு ஆண்டு தேர்வை தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது குறித்த தகவல்

சென்னை: தமிழகத்தில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் தற்போது 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டு வருகிறது.

அதை தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் 28- ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

schools,summer vacations,general exams ,பள்ளிகள் , கோடை விடுமுறை,பொதுத்தேர்வு

இந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே அதன் படி ஜூன் 1 அல்லது ஜூன் 5 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் எனவும்,

இது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :