Advertisement

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ள தகவல்

By: Nagaraj Tue, 27 June 2023 12:56:03 PM

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ள தகவல்

கொழும்பு: விமான சேவை அறிவிப்பு... தமது சேவைகளை வினைத்திறனாக தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு முன்னெடுக்க முடியுமென ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் 18 இலிருந்து 15 ஆக குறைந்துள்ளன இதேவேளை குத்தகை காலாவதியாவதால் விமான பற்றாக்குறை ஏற்படுமென ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கணித்திருந்தது.
எனினும்,எதிர்பாராத நிகழ்வுகளால் எதிர்பார்த்ததை காட்டிலும் நிலைமை மோசமடைந்தன உள்நாட்டில் உதிரிபாகங்கள் கிடைக்காமை காரணமாக இரண்டு விமானங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டன.
அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக புதிய குத்தகைகளுக்கான கொள்முதல் செயல்முறையும் தாமதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் இந்த நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

return to normal,srilankan airlines,flight service,statement ,வழமைக்கு திரும்பும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விமான சேவை, அறிக்கை


Tags :