ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடருக்கான பணிகள் நடப்பதாக தகவல்
By: Nagaraj Sun, 16 Aug 2020 7:30:51 PM
மழைக்கால கூட்டத் தொடருக்காக ராஜ்யசபா தயாராகிறது என்று டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ராஜ்யசபா செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபா செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஆகஸ்ட் 3வது வாரத்தில், மழை கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கான பணிகளை விரைவாக முடிக்கும்படி அவைத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக அவையில் கூடுதலாக 4 திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜ்யசபா மாடங்களில் 6 சிறிய திரைகள், ஆடியோ கன்சோல்கள், கிருமிகளை
நீக்கும் புற ஊதா கதிர்வீச்சு, லோக்சபா, ராஜ்யசபாவை இணைக்கும் ஆடியோ-
வீடியோ சிக்னல்கள், சேம்பரில் கேலரிகளை பிரிக்கும் திரைகள் ஆகியவை
அமைக்கப்பட்டுள்ளன.
பார்லிமென்டில் இரு அவைகளிலும் சேம்பர்கள்
மற்றும் கேலரிகளை பயன்படுத்தி மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து
ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும்
ஆலோசனை நடத்தினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.