Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குவாரிகள் விதிமுறைகளின் படி செயல்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

குவாரிகள் விதிமுறைகளின் படி செயல்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 04 Apr 2023 11:08:23 PM

குவாரிகள் விதிமுறைகளின் படி செயல்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

விருதுநகர்: விதிமுறைகளின் படி செயல்படுகிறதா?... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குவாரிகள் விதிமுறைகளின்படி செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குவாரிகள், மணல் குவாரிகள், ஜல்லி குவாரிகள் செயல்பட முறையான உரிமம் பெற வேண்டும். பொதுவாக குவாரிகள் செயல்பாட்டால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போதும், பொதுமக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாளிலும் புகார் கூறுவது தொடர்கிறது.

assurance,district,district administration,quarries,regulations, ,உறுதி, குவாரிகள், மாவட்ட நிா்வாகம், மாவட்டம், விதிமுறைகள்

விருதுநகர் அருகே செங்குன்றபுரத்தில் ஓராண்டுக்கு முன் உரிமம் காலாவதியான கல்குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. குவாரிகள் செயல்படுவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் தலைமை தாங்குகிறார். இத்துறைகளின் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், குவாரிகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

ஓராண்டுக்கும் மேலாக உரிமம் இல்லாமல் இயங்கி வரும் குவாரி மீது கனிமவளத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்திலுள்ள குவாரிகள் முறையாக உரிமம் பெற்று விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :