Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

கொரோனா நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

By: Nagaraj Sun, 29 Nov 2020 1:12:31 PM

கொரோனா நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பரவலை மேலும் தடுக்கும் வகையில், மாஸ்க் அணியாமல் சுற்றுவோர் மீதும், தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

chief secretary,personal,interval,corona,control ,தலைமை செயலாளர், தனிநபர், இடைவெளி, கொரோனா, கட்டுப்பாடு

இதுதொடர்பான கடிதத்தில், கொரோனா பரவல் சற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைகாலமாக, பொது இடங்களுக்கு வருவோரில், பெரும்பான்மையானோர் முகக்கவசம் அணிவதில்லை என்றும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், மால்கள், மார்க்கெட்டுகள், சந்தைகளுக்கு வருவோர் தனிநபர் இடைவெளியே கடைபிடிப்பதில்லை என்பதை கண்கூடாக காண முடிவதாக, தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags :
|