Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலக்குகளை திட்டமிட்டபடி அடைய அமைச்சர்களுக்கு உத்தரவு

இலக்குகளை திட்டமிட்டபடி அடைய அமைச்சர்களுக்கு உத்தரவு

By: Nagaraj Wed, 29 June 2022 09:50:08 AM

இலக்குகளை திட்டமிட்டபடி அடைய அமைச்சர்களுக்கு உத்தரவு

உத்தரபிரதேசம்: அமைச்சர்களுக்கு உத்தரவு... உத்தர பிரதேசத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று 100 நாள்களை எட்டவுள்ள நிலையில், இலக்குகளை திட்டமிட்டப்படி அடையுமாறு அமைச்சா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் மாா்ச் வரை உத்தர பிரதேசத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக மாா்ச் 25-ஆம் தேதி பதவியேற்றது.

chief,plans,to be completed,ministers,order ,முதல்வர், திட்டங்கள், முடிக்க வேண்டும், அமைச்சர்கள், உத்தரவு

தொடா்ந்து அனைத்து துறைகளுக்கும் முதல் 100 நாள்கள், 6 மாதங்கள், ஓராண்டு என 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்நிலையில், ஜூலை 5-ஆம் தேதியுடன் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுப் பதவியேற்று 100 நாள்கள் நிறைவடையுள்ளது.


இதையொட்டி லக்னெளவில் உள்ள யோகி ஆதித்யநாத்தின் அரசு இல்லத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் 100 நாள்களில் நிறைவேற்ற வகுக்கப்பட்ட திட்டங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அமைச்சா்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா் என்று மாநில முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|