Advertisement

கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

By: vaithegi Wed, 22 Nov 2023 09:54:11 AM

கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய  அறிவுறுத்தல்

சென்னை: ப்ளூ காய்ச்சல் பரவலால் கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி உரிய மருந்துகளை சாப்பிட வேண்டும்; குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுத்து உள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை பாதிப்பின் அறிகுறிகள் என்று கூறப்பட்டுள்ளது.

instruction,mask,coimbatore district administration ,அறிவுறுத்தல் ,முகக்கவசம் ,கோவை மாவட்ட நிர்வாகம்

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ளவேண்டும் என்றும் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|