ஒடிசா ரயில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
By: vaithegi Sun, 04 June 2023 10:44:56 AM
ஒடிசா : சீர்குலைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தீவிரம் .... ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நேற்றய நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 747 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 56 பேர் படுகாயமடைந்து, கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தற்போது, ரயில் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.
இதனை அடுத்து இது குறித்து ரயில்வே அமைச்சகத்தின் தகவளின்படி, பாதிக்கப்பட்ட தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
7க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரயில்கள், 3-4 ரயில்வே மற்றும் 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.