Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் கவனத்திற்கு .. விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரம்

மாணவர்கள் கவனத்திற்கு .. விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரம்

By: vaithegi Sat, 04 Mar 2023 5:49:47 PM

மாணவர்கள் கவனத்திற்கு   ..   விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை: தமிழகத்தில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது அரசு தேர்வுகள் இயக்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் செய்முறை பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. முதல் நாள் மொழித்தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வானது கால அட்டவணையின் படி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் நன்கு தயாராகும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 1 வார காலமே உள்ள நிலையில் தேர்வுக்கான வினாத்தாளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

answer sheet,students,time table ,விடைத்தாள் ,மாணவர்கள் , கால அட்டவணை

தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாளில் தையல் எந்திரம் மூலம் முகப்பு தாள் இணைக்கும் பணி ஈரோடு மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து விரைவில் வினாத்தாள்கள் தயாரிப்பு பணி முடிக்கப்பட்டு வினாத்தாள்கள் அந்தந்த காப்பு அறைகளுக்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags :