Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை

பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை

By: Nagaraj Fri, 21 Apr 2023 9:57:06 PM

பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை

பூஞ்ச்: தீவிர தேடுதல் வேட்டை... ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க, டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நேற்று மெந்தர் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

military,intelligence,search,officers,information,security ,ராணுவம், உளவுத்துறை, தேடுதல், அதிகாரிகள், தகவல், பாதுகாப்பு

இத்தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 6 முதல் 7 பயங்கரவாதிகள் அடங்கிய குழு ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கும் நிலையில், அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய பகுதியில் ராணுவம், உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து விரிவான தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|