Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் அமைச்சர் துரைகண்ணுக்கு தீவிர சிகிச்சை

செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் அமைச்சர் துரைகண்ணுக்கு தீவிர சிகிச்சை

By: Monisha Sat, 31 Oct 2020 10:51:53 AM

செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் அமைச்சர் துரைகண்ணுக்கு தீவிர சிகிச்சை

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் துரைகண்ணுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து, அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா பாதிப்பை சரி செய்யும் சிகிச்சை நடைபெற்று வந்த வேளையில், இதய பாதிப்பு பிரச்சினையும் ஏற்பட்டது.

minister,duraikannu,artificial respiration,ecmo instrument,treatment ,அமைச்சர்,துரைகண்ணு,செயற்கை சுவாசம்,எக்மோ கருவி,சிகிச்சை

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததால் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

Tags :