Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு

குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு

By: vaithegi Wed, 12 July 2023 09:53:33 AM

குரூப் 4  பணியிடங்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு

சென்னை: ஜூலை 20 முதல் கலந்தாய்வு ... தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , குறுக்கெழுத்து தட்டச்சர் , தண்டலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்தாண்டு குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 7301 இடங்களை நிரப்ப கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இதையடுத்து இதில் 18.6 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

consultation,group 4 ,கலந்தாய்வு  ,குரூப் 4

எனினும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.ஆனால் அதே சமயம் பணியிடங்களுக்கான எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கபட்டது. இதையடுத்து பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10,219 குரூப் 4 பணியிடங்களில் நிரப்ப கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :