Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் அறிமுகம்

ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் அறிமுகம்

By: vaithegi Fri, 24 June 2022 2:30:12 PM

ராஜஸ்தான்  அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் அறிமுகம்

ராஜஸ்தான் : கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடந்தது. மேலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முயற்சியின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு, அரசுப் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் ஆகியவை அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் அசோக் கெலாட் பட்ஜெட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ‘முக்யமந்திரி பால் கோபால் யோஜனா’ திட்டத்தின் கீழ் வாரத்தில் 2 நாட்கள் பால் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

paul,students,government schools ,பால் ,மாணவர்கள்,அரசுப் பள்ளிகள்

அதன்படி அரசு பள்ளிகள், மதரஸாக்கள் மற்றும் மதிய உணவு திட்டத்துடன் தொடர்புடைய சிறப்பு பயிற்சி மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் குழந்தைகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (கல்வி) பவன்குமார் கோயல் தெரிவித்தார்.

இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் கிடைக்கும். இதன் அடிப்படையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 200 மில்லி பாலும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

Tags :
|