Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு; 15 மாவட்டத்தில் விளை பயிர்கள் சேதம்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு; 15 மாவட்டத்தில் விளை பயிர்கள் சேதம்

By: Nagaraj Tue, 26 May 2020 09:02:31 AM

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு; 15 மாவட்டத்தில் விளை பயிர்கள் சேதம்

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சுமார் 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து தவுசா பகுதியை நோக்கி படையெடுக்கும் வெட்டுக்கிளிகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

fruit crops,re-locusts,invasion,farmers ,விளை பயிர்கள், மீண்டும் வெட்டுக்கிளிகள், படையெடுப்பு, விவசாயிகள்

மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. ஒரு நாளுக்கு 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் தன்மை கொண்ட வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அளிக்கும் தன்மை கொண்டவை.

26 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் சுமார் 7 லட்சம் ஏக்கர் ஹெக்டேர் விளை பயிர்கள் சேதமானதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

Tags :