Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அடுத்த வாரம் ஆலோசனை செய்ய ஐ.பி.எல் முடிவு

சீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அடுத்த வாரம் ஆலோசனை செய்ய ஐ.பி.எல் முடிவு

By: Karunakaran Sun, 21 June 2020 12:13:23 PM

சீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அடுத்த வாரம் ஆலோசனை செய்ய ஐ.பி.எல் முடிவு

கடந்த 15-ஆம் தேதி லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீனா தரப்பிலும் கடும் உயிர்சேதம் ஏற்பட்டது. எல்லையில் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவதால், இந்தியர்கள் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

சீன பொருட்களை புறக்கணிப்போம், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம் என இந்தியா முழுவதும் கோஷம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு சில சீன நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளதால், அதனை பாதியில் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சராக 2022-ம் ஆண்டு வரை உள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.440 கோடியை விவோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது.

ipl,chinese advertising contract,consulting,governing council committee , ஐ.பி.எல்,சீன நிறுவன விளம்பர ஒப்பந்தம்,ஆலோசனை,ஆட்சி மன்ற குழு

தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எல்லையில் நடந்த சண்டையில் துணிச்சல்மிக்க நமது இந்திய வீரர்களின் உயிர்தியாகத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இதையடுத்து ஐ.பி.எல். போட்டிக்கான பல்வேறு விளம்பர ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிக்க அடுத்த வாரத்தில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூடுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வர்த்தக மற்றும் தொழில் மைய கன்வீனர் பிரிஜேஷ் கோயல் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு எழுதிய கடிதத்தில், சீன நிறுவனங்கள் உடனான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக முறித்துக் கொள்ளாவிட்டால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் ஐ.பி.எல். போட்டி மற்றும் உள்நாட்டில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
|