Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.பி.எல். போட்டியின் போது தெரியும் தோனியின் திறமை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார்

ஐ.பி.எல். போட்டியின் போது தெரியும் தோனியின் திறமை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார்

By: Nagaraj Tue, 02 June 2020 3:46:54 PM

ஐ.பி.எல். போட்டியின் போது தெரியும் தோனியின் திறமை; சுரேஷ் ரெய்னா சொல்கிறார்

ஐ.பி.எல்.-ன் போது தெரியும் தோனியின் திறமை... ஐபிஎல் தொடர் விரைவில் நடக்க வேண்டும் அப்போது தோனியின் திறமையை அனைவரும் பார்ப்பீர்கள் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

தோனி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்பதை முடிவு செய்வதில் முக்கிய பங்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தோனி தனது தகுதியை நிரூபிக்க வேண்டிய அனைத்து திட்டங்களும் தற்போது தூக்கி எறியப்பட்டுள்ளது.

இது முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் ஓய்வு பற்றிய ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா, தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

dhoni,coaching,talent,ipl,raina,swimming pool ,தோனி, பயிற்சி, திறமை, ஐ.பி.எல்., ரெய்னா, நீச்சல் குளம்

இதுகுறித்து பேசிய அவர், "இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் பயிற்சி வித்தியாசமாக இருந்தது. நான் அவருடன் பல ஆண்டுகளாக இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியிலும் விளையாடி உள்ளேன். ஆனால் இந்த முறை தோனியின் பயிற்சி வித்தியாசமாக இருந்தது. ஐபிஎல் தொடர் விரைவில் நடக்க வேண்டும்

அப்போது தோனியின் திறமையை அனைவரும் பார்ப்பீர்கள். ஒருவர் கடுமையாக உழைக்கும்போது, பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் அவர்களுக்கு வழிவகுக்கும். முதல் சில நாட்களில் பயிற்சியை தோனி லேசாக எடுத்துக்கொண்டு ஜிம்மிற்கு செல்வதில் கவனம் செலுத்தினார். நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங்கும் உடல் தகுதியும் முன்னேறிக் கொண்டே இருந்தது. காலை 9 முதல் 9.30 வரை ஜிம்மிலும், அதை தொடர்ந்து நீச்சல் குளத்திலும் இருப்போம்" என்று கூறியுள்ளார்.

Tags :
|
|
|
|