Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி 3 பேரை திருமணம் செய்து பணம் மோசடி செய்த பெண் கைது

ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி 3 பேரை திருமணம் செய்து பணம் மோசடி செய்த பெண் கைது

By: Nagaraj Tue, 28 July 2020 4:27:35 PM

ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி 3 பேரை திருமணம் செய்து பணம் மோசடி செய்த பெண் கைது

ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்... ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக பெண் ஒருவர், திருப்பதி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 3 மாதத்திற்கு ஒருவர் என 3 கணவரை மாற்றி உள்ளார் அந்த பெண்.

திருப்பதியை சேர்ந்த சொப்னா என்பவர் தன்னை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என கூறி மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக மாப்பிள்ளை தேடியுள்ளார். இதில் சொப்னாவை பார்த்து சொக்கிப்போன பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம ஆஞ்சநேயலு என்ற டென்மார்க் மாப்பிள்ளை அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ராமஆஞ்சநேயலு - சொப்னா தம்பதியர் இருவரும் ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்த நிலையில், மூன்று மாதங்கள் கழித்து, தான் பணிபுரியும் டென்மார்க் புறப்பட்ட ராமஆஞ்சநேயலு மனைவியையும் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதனை மறுத்த மனைவி சொப்னா தான் இங்கேயே இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.

female ips,fraud,marriage,sopna,fraud ,பெண் ஐபிஎஸ், மோசடி, திருமணம், சொப்னா, மோசடி

ராமஆஞ்சநேயலு வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றதும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமஆஞ்சநேயலுவின் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற சொப்னா, ராம ஆஞ்ச நேயலு தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டதாக கூறி பெற்றோரிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பணத்திலேயே குறியாக இருந்த சொப்னாவின் நடவடிக்கையை கண்டு சந்தேகம் அடைந்த ராம ஆஞ்சநேயலுவின் பெற்றோர் டோணகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி என கூறிய சொப்னாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது .

ஐ.பி.எஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துகொண்டு மாப்பிள்ளை வீட்டாரிடம் மிரட்டி பணம் பறித்ததும், பதங்கி சொப்னா, பதங்கி ஹரினி, நந்தமுரி சொப்னா ஆகிய பெயர்களில் 3 மாப்பிள்ளைகளை திருமணம் செய்து மோசடி செய்ததும் இவர்தான் என்பது அம்பலமானது.

female ips,fraud,marriage,sopna,fraud ,பெண் ஐபிஎஸ், மோசடி, திருமணம், சொப்னா, மோசடி

முதலில் சித்தூரை சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் 3 மாதத்தில் அவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு கழற்றி விட்டுள்ளார். பிரித்திவிராஜ் அளித்த புகாரின் பேரில் சொப்னா மீது திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 2வதாக ஆத்ம கூரைசேர்ந்த சுதாகர் என்பவரை மேட்ரி மோனியல் இணையதளம் மூலம் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அவரது குடும்பத்தினரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இப்படி அடுத்தடுத்து பெயரை மாற்றி 3 ஆண்களின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய சொப்னாவின் திருமண வாழ்க்கையில் 3 வதாக சிக்கிய ராம ஆஞ்சநேயலுவின் பெற்றோர் எடுத்த நடவடிக்கையால் சிக்கி உள்ளார்.

சொப்னா மீது மோசடி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தான் தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாக சொப்னா கூறியுள்ளார். ஆனால் ராம ஆஞ்சநேயலுவோ சொப்னாவின் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை என்றும் திருமணமான நாள் முதல் சொப்னா தன்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என்றும் கைவிரித்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து மோசடி வழக்கில் சிக்கிய சொப்னாவை காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் உண்மையிலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா ? அப்படியென்றால் அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் ? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags :
|
|