நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் இரா.சம்பந்தன்
By: Nagaraj Wed, 05 Aug 2020 8:50:52 PM
9ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற இரா.சம்பந்தன், தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதேவேளை பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்டத்தின் பிரதான வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமேயும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு இன்று காலை சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை
காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு
தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் வருகை தந்து
தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பம்பலபிட்டிய
லின்சே மகளிர் பாடசாலையில் இன்று (புதன்கிழமை) வாக்களித்த பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டுக்கு பின்னர் வாக்காளராக வாக்களிக்க வந்ததாகவும்
தெரிவித்துள்ளார்.