Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கடைகளில் சில மாதங்களில் கருவிழி பதிவு முறை நடைமுறைக்கு வரும்

ரேஷன் கடைகளில் சில மாதங்களில் கருவிழி பதிவு முறை நடைமுறைக்கு வரும்

By: vaithegi Tue, 07 Nov 2023 11:54:01 AM

ரேஷன் கடைகளில் சில மாதங்களில் கருவிழி பதிவு முறை நடைமுறைக்கு வரும்


சென்னை: விரல்ரேகைக்கு பதிலாக கருவிழி பதிவு முறை நடைமுறை வருகிறது ...தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது வரையிலும் விரல்ரேகை பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு விரல் ரேகை பதிவாவதில்லை. எனவே இதனை, சாதகமாக பயன்படுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் பல குளறுபடிகளில் ஈடுபடுகின்றனர்.

iris registration procedure,ration shop ,கருவிழி பதிவு முறை நடைமுறை,ரேஷன் கடை

இந்த நிலையில், கைரேகைக்கு பதிலாக கருவிழி மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 2024க்குள் 30% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும்.

அதன்படி அடுத்த 9 மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி திட்டம் கொண்டு வரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, புதிய ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Tags :