Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா ?

கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா ?

By: Karunakaran Tue, 15 Sept 2020 2:47:32 PM

கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா ?

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து அதுகுறித்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் பல்வேறு நாடுகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. பல நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிகள் பலகட்ட பரிசோதனைகளில் உள்ளன. கொரோனா தொற்று சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா? என இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு தொடங்கியுள்ளனர்.

corona vaccine,orally,injecting,corona virus ,கொரோனா தடுப்பூசி, வாய்வழி, ஊசி போடுவது, கொரோனா வைரஸ்

இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிறுவனங்கள் தயாரித்த 2 தடுப்பூசிகளை 30 தன்னார்வலர்களுக்கு உள்இழுப்பான் மூலம் வாய்வழியாக செலுத்த முடிவு செய்துள்ளனர். இதில் சிறந்த பலன் ஏற்பட்டால், கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் சிறந்த முடிவாக அது இருக்கும். இது ஊசியாக செலுத்துவதை விட, உள் இழுப்பதற்கு குறைவான டோஸ் மட்டுமே தேவைப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு தலைவர் கிறிஸ் சியூ கூறுகையில், இன்புளூவன்சா தடுப்பு மருந்தை நாசி ஸ்பிரே மூலம் உள் செலுத்துவதால் சிறந்த பலன் கிடைப்பதுடன், இந்த நோய் பரவுவதும் தடுக்கப்படுகிறது. இதைப்போல கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும்போதும் சிறந்த பலன் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|