Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலகுகிறாரா?

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலகுகிறாரா?

By: Nagaraj Fri, 09 June 2023 06:03:50 AM

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலகுகிறாரா?

புதுடில்லி: பிரியங்கா காந்தி விலகலா?... உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

election,priyanka,resignation, ,தேர்தல், பிரியங்கா காந்தி, ராஜினாமா

அவர் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று முந்தைய தேர்தலை விட மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ரகாத் அல்லது காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Tags :