Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்தியபிரதேசத்தில் தொடங்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா ? - ராகுல் காந்தி கேள்வி

மத்தியபிரதேசத்தில் தொடங்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா ? - ராகுல் காந்தி கேள்வி

By: Karunakaran Sun, 12 July 2020 8:58:13 PM

மத்தியபிரதேசத்தில் தொடங்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா ? - ராகுல் காந்தி கேள்வி

மத்தியபிரதேச மாநிலம் ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி, நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். 1,500 ஏக்கர் பரப்பளவில் இந்த ரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே பெரியது என அப்போது அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின்சக்தி திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டது. ஆசியாவிலேயே பெரியது ரேவா சூரிய மின்சக்தி திட்டமா? அல்லது பவகடா சூரியமின்சக்தி திட்டமா? என்று பதிவிட்டிருந்தார்.

rahul gandhi,solar power,madhya pradesh,modi ,ராகுல் காந்தி, சூரிய சக்தி, மத்திய பிரதேசம், மோடி

மேலும் இதுகுறித்து மத்திய மின்சார துறை மந்திரி பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவை இணைத்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவிலேயே பெரியதா ? பிரதமர் மோடி ‘அசத்யாகிரகி’ (அதாவது, பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர் என்று பொருள்) என்று பதிவிட்டுள்ளார்.

Tags :