- வீடு›
- செய்திகள்›
- சர்க்கரை கரும்பில் இருந்து தயாராகிறதா? என்பது கூட ராகுல்காந்திக்கு தெரியாது - சிவராஜ் சிங் சவுகான்
சர்க்கரை கரும்பில் இருந்து தயாராகிறதா? என்பது கூட ராகுல்காந்திக்கு தெரியாது - சிவராஜ் சிங் சவுகான்
By: Karunakaran Thu, 17 Dec 2020 08:51:49 AM
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 22-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், ஆளும் பாஜக அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே வார்த்தைமோதல் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துக்கு ஆளும் பாஜக கட்சினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல் மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், விவசாயத்தை பற்றி ராகுல் காந்திக்கு என்ன தெரியும்? சர்க்கரை கரும்பில் இருந்து தயாராகுகிறதா? அல்லது இயந்திரத்தில் இருந்து வருகிறதா? என்பது கூட அவருக்கு தெரியாது. தேச நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று கூறினார்.