கால் அகற்றப்பட்டதா? ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கிடைத்த தகவல்
By: Nagaraj Wed, 19 Oct 2022 12:10:20 PM
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கால் துண்டிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது அதிமுக தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் தலையில் மரக்கட்டையால் தாக்கப்பட்டது என கூறியதும் தவறானது என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்சொன்ன ஆதாரங்களில் முழுங்காலுக்கு கீழே மறைந்த முதல்வரின் கால்கள்
துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லையென்றும்
அவருக்கு காயங்களோ, மெல்லக் கொல்லும் விஷமோ வழங்கப்படவில்லையென்றும்
தெளிவாக உறுதி செய்யப்பட்டு அவை உடனடியாக நிராகரிக்கப்படுகின்றன என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால் துண்டிக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.