- வீடு›
- செய்திகள்›
- ஐ.எஸ். பயங்கரவாதி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல்
ஐ.எஸ். பயங்கரவாதி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல்
By: Karunakaran Sat, 22 Aug 2020 2:57:33 PM
டெல்லியில் தவுலா குவானில் போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஒருவர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலை டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 30 வயதுடைய அந்த நபரிடமிருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கி, வெடிக்காத தோட்டாக்கள் போன்றவை கைப்பற்றப்பட்டது. பிரஷர் குக்கரில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பின்பு, ரிட்ஜ் சாலையில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் வைத்து செயலிழக்க செய்யப்பட்டது.
அந்த நபர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தளபதிகளிடம் பயிற்சி பெற்றதும் , இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையளதளம் வழியாக அந்த நபர் தொடர்பில் இருந்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடனும் அந்நபர் தொடர்பில் இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நபரை உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பலராம்பூருக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.