இது கூட தெரியாம கட்சி தலைமைக்கு போட்டியா? ரிஜெக்ட் செய்தார்
By: Nagaraj Sun, 02 Oct 2022 11:57:02 AM
டெல்லி: கேஎன் திரிபாதி விதிமுறைப்படி வேட்புமனுவை நிரப்பாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று மதுசூதன் மிஸ்திரி கூறினார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் சசி தரூர், மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றதாக அக்கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. கேஎன் திரிபாதி விதிமுறைப்படி வேட்புமனுவை நிரப்பாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று மதுசூதன் மிஸ்திரி கூறினார்.
அவரது வேட்புமனு தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில்
நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டதால்
நிராகரிக்கப்பட்டதாக மதுசூதன் மிஸ்திரி குறிப்பிட்டார். வேட்புமனுக்களை
வாபஸ் பெற அக்டோபர் 8 கடைசி நாளாகும்.
அன்று மாலை 5 மணிக்கு இறுதி
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு
மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், சசி தரூருக்கும் இடையே நேரடிப்
போட்டி நிச்சயம் என மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.