Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 922 பேர் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 922 பேர் தனிமைப்படுத்தல்

By: Nagaraj Fri, 16 Oct 2020 9:13:38 PM

கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 922 பேர் தனிமைப்படுத்தல்

தனிமைப்படுத்தப்பட்டனர்... கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் 922பேர் தென் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் சந்திமா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காலி மாவட்டத்தில் 348பேரும், மாத்தறை மாவட்டத்தில் 328பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 246பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சுகாதார சேவைகள் இயக்குநரின் மாவட்ட அலுவலகங்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

matara,district,isolated,pcr test ,மாத்தறை, மாவட்டம், தனிமைப்படுத்தப்பட்டனர், பிசிஆர் சோதனை

அந்தவகையில் காலி மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 3382 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாத்தறை மாவட்டத்தில் 2078பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 1071பேருக்கும் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|