Advertisement

காசா பகுதியில் விமானப்படை குண்டுகளை வீசிய இஸ்ரேல்

By: Karunakaran Thu, 17 Sept 2020 09:13:41 AM

காசா பகுதியில் விமானப்படை குண்டுகளை வீசிய இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இஸ்ரேல் இவர்களை பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மாதத்தில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிழவியது. அப்போது, காசா முனை பகுதியில் இருந்து வெடிக்கக்கூடிய எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்களை இஸ்ரேல் வான்வெளிக்குள் பறக்கவிட்டு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இரவு நேரங்களில் எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் இஸ்ரேல் நாட்டு மக்களின் வீடுகளில் விழுந்து தீவிபத்துக்களை ஏற்படுத்தி வந்தன.

israel,air force bombs,gaza,hamas ,இஸ்ரேல், விமானப்படை குண்டுகள், காசா, ஹமாஸ்

காசாவில் இருந்து பல ராக்கெட் தாக்குதல்களும் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா முனை பகுதி மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. கத்தார் மத்தியஸ்தம் மேற்கொண்டு இரு தரப்பும் சண்டையை நிறுத்த கடந்த 1-ம் தேதி ஒப்புக்கொண்டதால், இருதரப்புக்கும் இடையே பல நாட்களாக மோதல் இல்லாமல் சற்று அமைதி நிலவியது.

இந்நிலையில் அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவப்பட்ட 14 ராக்கெட்டுகளை இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதல் தடுப்பு அமைப்பு அழித்துள்ளது. ஆனால், ஒரு ராக்கெட் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. அதன்பின் காசா முனைப்பகுதியில் குண்டுமழைப்பொழிந்து இஸ்ரேல் விமானப்படை நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. கடந்த 1-ம் தேதி போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் இந்த மோதல் மூலம் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் இருதரப்பு இடையே மீண்டும் தொடங்கலாம்.

Tags :
|
|