Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்... பிணைக் கைதிகளை விடுவிக்காமல் ஹமாஸ் போராளிகள் பிடிவாதம்

தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்... பிணைக் கைதிகளை விடுவிக்காமல் ஹமாஸ் போராளிகள் பிடிவாதம்

By: Nagaraj Mon, 23 Oct 2023 3:38:56 PM

தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்... பிணைக் கைதிகளை விடுவிக்காமல் ஹமாஸ் போராளிகள் பிடிவாதம்

காஸா: பிணைக்கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். மேலும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களை நிறுத்தும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

the struggle,israel,hamas,hostages,the war will continue ,போராட்டம், இஸ்ரேல், ஹமாஸ், பிணைக்கைதிகள், யுத்தம் தொடரும்

காசா எல்லையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி வருவதுடன் தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.

ஹமாசை ஒழித்துக் கட்டும் வரை யுத்தம் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹமாசால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோரி மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் நடைபெற்றது.

Tags :
|
|