சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் - கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி
By: Karunakaran Tue, 15 Sept 2020 3:38:24 PM
சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள் பலர் பதுங்கியுள்ளனர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த கிளர்ச்சியாளர்களை அழிக்க இஸ்ரேல் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு. இந்நிலையில் சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அல்பு கமல் பகுதியில் நேற்று இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் நாட்டின் இந்த திடீர் வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சிரியாவில் 2011 முதல் உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு சண்டையில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள கிளர்ச்சியாளர்களை அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.