ரேபிட் கிட்களை பரிசோதிக்க இந்தியா வந்த இஸ்ரேல் குழுவினர்
By: Nagaraj Tue, 28 July 2020 4:27:46 PM
இந்தியா வந்துள்ள இஸ்ரேல் குழுவினர்... கொரோனா பரிசோதனையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு உள்ள ரேபிட் கிட்களை பரிசோதிப்பதற்காக இஸ்ரேல் குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் இந்திய மருத்துவ வல்லுநர்கள் இணைந்து கொரோனா தொற்றை விரைவாகக் கண்டறியும் புதிய ரேபிட் டெஸ்ட் கருவியை உருவாக்கியுள்ளனர். அதன் முதற்கட்ட சோதனை இஸ்ரேலில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்தியாவில் அந்த கருவிகளை பரிசோதிப்பதற்காக இஸ்ரேல்
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையின் மூத்த அதிகாரி தலைமையிலான குழுவினர்
டெல்லி வந்தடைந்துள்ளனர்.
இஸ்ரேல் குழுவினர் இந்திய பாதுகாப்பு
மற்றும் சுகாதார அமைச்சக பிரதிநிதிகளுடன் இணைந்து, கொரோனா
பாதிப்புக்குள்ளான இந்தியர்கள் மூலம் புதிய கருவிகளை பரிசோதிக்க உள்ளனர்.