Advertisement

வழக்குகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வழங்கல்

By: Nagaraj Sun, 13 Dec 2020 7:24:02 PM

வழக்குகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வழங்கல்

வழக்குகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரதானிகள் பெற்றுக் கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் இரு அதிகாரிகளின் உதவியுடன் அரசசார்பற்ற நிறுவனங்களின் நான்கு பிரதானிகள், அரசியல், மனித உரிமை மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த இரகசிய ஆவணங்கள் சுவிஸ் நாட்டை சேர்ந்த வழக்கு விசாரணைகள் தொடர்பான பணிப்பாளருக்கு கிடைத்துள்ளன. மேலும், குற்றவியல் விசாரணை திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட இராணுவ மற்றும் கடற்படையை சேர்ந்த 41 புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தமான இரகசிய அறிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags :