Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ் வழங்கல்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ் வழங்கல்

By: Nagaraj Wed, 19 Aug 2020 09:15:58 AM

சென்னையில் நேற்று ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ் வழங்கல்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 14,300 பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுபடுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

e-pass procedure,chennai,corporation,application ,இ-பாஸ் நடைமுறை, சென்னை, மாநகராட்சி, விண்ணப்பம்

இதனால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. இது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் சென்னையில் 14,300 பேருக்கு
இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பலரும் வருகை புரிந்துள்ளனர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்தததையடுத்து விண்ணப்பித்த 15 நிமிடங்களில் எவரும் இ-பாஸ் பெறலாம்.

Tags :