சுனாமி பேரலை அனர்த்தம் நடந்து 18 ஆண்டுகள் நிறைவு
By: Nagaraj Mon, 26 Dec 2022 09:29:54 AM
கொழும்பு: சுனாமி பேரலை அனர்த்தம் நடந்து இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதை ஒட்டி நாட்டின் பல இடங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் நடக்கிறது.
இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன
அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம்
கோரிக்கை விடுத்துள்ளது.
2004ம் ஆண்டு டிசம்பர்
மாதம் 26ம் திகதி சுனாமி நாட்டை தாக்கியதோடு சுமார் 40 ஆயிரத்திற்கு
மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பின்னர் 2005ம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த
முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .