Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பவர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பவர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Fri, 21 July 2023 4:11:01 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பவர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை ..

தமிழகத்தில் மின் இணைப்பு பெற்றுள்ள பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பராமரிப்பு பணிகளின் போது சீரான மின் விநியோகத்திற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

power,kanchipuram ,பவர் ,காஞ்சிபுரம்

இதனை அடுத்து இந்த பணிகள் முடிவடையும் வரை மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

எனவே மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகல் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|