Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசி போடாதவர்களால் சவாலாக உள்ளது... சுகாதாரத்துறை செயலாளர் வேதனை

தடுப்பூசி போடாதவர்களால் சவாலாக உள்ளது... சுகாதாரத்துறை செயலாளர் வேதனை

By: Nagaraj Thu, 09 June 2022 4:02:10 PM

தடுப்பூசி போடாதவர்களால் சவாலாக உள்ளது... சுகாதாரத்துறை செயலாளர் வேதனை

சென்னை: தடுப்பூசியை சிலர் போட்டுக்கொள்ளாமல் இருப்பது நமக்கு சவாலாக உள்ளது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

treatment,center,action,vaccination,testing ,சிகிச்சை, மையம், நடவடிக்கை, தடுப்பூசி, பரிசோதனை

தடுப்பூசியை சிலர் போட்டுக்கொள்ளாமல் இருப்பது நமக்கு சவாலாக உள்ளது. 3 நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறது. இந்த ஆண்டு அதிநவீன கரு உருவாக்கும் வசதி கொண்ட பெர்டிலிட்டி சென்டர் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளது.
ஆண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் மையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் கரு உருவாக்க சிகிச்சை மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|