Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மராட்டியத்தில் பாஜக வெற்றி பெறாது என்பது தெளிவாகியுள்ளது-சிவசேனா

மராட்டியத்தில் பாஜக வெற்றி பெறாது என்பது தெளிவாகியுள்ளது-சிவசேனா

By: Karunakaran Fri, 12 June 2020 10:28:50 AM

மராட்டியத்தில் பாஜக வெற்றி பெறாது என்பது தெளிவாகியுள்ளது-சிவசேனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் ஏற்கனவே அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நிசர்கா புயலால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அம்மாநில அரசு போராடி வருகிறது.

நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட ராய்காட் மற்றும் கொங்கன் பகுதிகளை சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ள தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சரத்பவார் இப்போது எப்படி விழித்தெழுந்தார் என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா பாஜகவை கடுமையாக சாடியுள்ளது.

bjp,shivsena,maharastra,chadrakanth patel,sarath pawar ,பாஜக,சிவசேனா,நிசர்கா,மகாராஷ்டிரா,சந்திரகாந்த் பாட்டீல்

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், சரத்பவார் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார். அதனால் அவர் தனது அரசியல் நேரத்தை எப்போதும் சரியாக பெறுகிறார். 6 மாதங்களுக்கு முன் பாஜக தலைவர்கள் நள்ளிரவில் விழித்தார்கள். அதிகாலையில் பதவியேற்பு விழாவை நடத்தினார்கள். அந்த சம்பவத்திற்கு பின் பாஜக தலைவர்கள் இன்னும் விழித்து இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்து விட முடியுமா? என இன்னும் காத்து இருக்கிறார்கள் என்று பாஜகவை சாடியுள்ளது.

மேலும், மராட்டியம் கொரோனா வைரஸ் மற்றும் நிசர்கா சூறாவளியை எதிர்த்து போராடிய போது பாஜக அரசியல் செய்வது பரிதாபகரமானது. அம்பன் சூறாவளி சேதத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கத்துக்கு மத்திய குழுவை அனுப்பியது நல்லது. நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட மராட்டியத்துக்கு ஏன் மத்திய குழுவை அனுப்பவில்லை. இதுபற்றி சந்திரகாந்த் பாட்டீல் மத்திய அரசை கேள்வி கேட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் அதில், மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்குவதால் அங்கு மத்திய அரசு உதவிகரம் நீட்டுவதாகவும், மராட்டியத்தில் பாஜக வெற்றி பெறாது என்பதும் தெளிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|