Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை ... விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க உள்ளதாக தகவல்

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை ... விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க உள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 17 Nov 2022 1:31:08 PM

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை   ...   விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க உள்ளதாக தகவல்

சென்னை: இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் அலுவலகம், சுற்றுலா மற்றும் பிற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வழக்கம் போல ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

train,travel ,ரயில் ,பயணம்

இதையடுத்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி வருகிற 19ஆம் தேதி முதல் செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை மற்றும் திருச்சி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 11.30, 12.02, 12.13, 1.20 மணிக்கு புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ரயில் வழக்கத்தை விட 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே மயிலாடுதுறைக்கு வந்தடையும். அதாவது மாலை 5.10 மணிக்கு முன்னதாக 4.25 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|