Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலத்துக்கு ஏற்ப இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் - பிரதமர் மோடி

காலத்துக்கு ஏற்ப இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் - பிரதமர் மோடி

By: Karunakaran Wed, 15 July 2020 1:45:30 PM

காலத்துக்கு ஏற்ப இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் - பிரதமர் மோடி

ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் இலக்கு 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தற்போது, உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றுநோய் பரவி உள்ள இந்த நேரத்தில், வேலை கலாச்சாரத்துடன், வேலையின் தன்மையும் மாறிவிட்டது. மாறிவரும் காலங்களில் இளைஞர்கள் புதிய திறன்களைப் பெறுகின்றனர் என்று கூறினார்.

modi,employment,indian prime minister,world youth skills day ,மோடி, வேலைவாய்ப்பு, இந்தியப் பிரதமர், உலக இளைஞர் திறன் தினம்

மேலும் அவர், திறன் என்பது நாம் நமக்கு நாமே கொடுக்கும் பரிசு, அது அனுபவத்துடன் வளர்கிறது. திறன் தனித்துவமானது, இது உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். வேலை வாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. வேலை மட்டுமின்றி செல்வாக்கு ஊக்கத்தையும் திறன் வழங்குவதாக அவர் உரையில் தெரிவித்தார்.

Tags :
|