Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் - உத்தவ் தாக்கரே

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் - உத்தவ் தாக்கரே

By: Karunakaran Mon, 06 July 2020 1:53:01 PM

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் - உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதுவும் மும்பை நகரில் கொரோனா தாக்கம் மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போது மும்பையில், இங்கு வைரசை துரத்துவோம் திட்டத்தின் கீழ் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக கொரோனா மையப்பகுதியாக இருந்த மும்பை தாராவியில் கொரோனா தாக்கம் அதிரடியாக குறைந்து உள்ளது. தற்போது நகரின் மும்பை மற்ற பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

uttav thackeray,mumbai,coronavirus,corona prevalence ,உத்தவ் தாக்கரே, மும்பை, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். மத்திய குழு கூட அவர்களின் பணிகளை பாராட்டியது. கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், நோய் அறிகுறியுள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|