அது வெள்ளை யானை இல்லை; புகைப்படம் வெளியிட்ட வன கட்டுப்பாட்டாளர்
By: Nagaraj Thu, 27 Aug 2020 7:59:42 PM
அட அது வெள்ளை யானை இல்லை என்று நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
எனினும் இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம்
இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது.
எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.