Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டி.கே.சிவக்குமார் போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல - பிரகலாத் ஜோஷி

டி.கே.சிவக்குமார் போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல - பிரகலாத் ஜோஷி

By: Karunakaran Mon, 24 Aug 2020 1:56:30 PM

டி.கே.சிவக்குமார் போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல - பிரகலாத் ஜோஷி

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறையில் அரசின் கைபாவையாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் செயல்படுவதாகவும், அவரை மிரட்டும் விதமாகவும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசினார். மேலும், தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேட்டி அளித்தபோது கூறுகையில், பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையின் போது போலீஸ் நிலையத்திற்கே தீவைக்கப்பட்டதுடன், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி இருந்தனர். வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்ததால் தான் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது என்று கூறினார்.

dk sivakumar,police commissioner,prakalat joshi,bengalore ,டி.கே.சிவகுமார், போலீஸ் கமிஷனர், பிரகலாத் ஜோஷி, பெங்களூர்

போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஒரு நேர்மையான அதிகாரி. அவரை மிரட்டும் விதமாக டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். போலீஸ் கமிஷனரை மிரட்டுவது சரியல்ல. டி.கே.சிவக்குமாருக்கு சட்டத்தை பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் மீது சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது. அவருக்கு சொந்தமான வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியதால், அந்த வழக்கை எதிர்த்து கொண்டு வருகிறார் என பிரகலாத் ஜோஷி கூறினார்.

மேலும் அவர், தற்போது டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே இருப்பதை மறந்து விட்டு வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. ஜாமீனில் வெளியே இருப்பதையும் மறந்து விடக்கூடாது. தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாக சொல்வதை நம்ப முடியவில்லை. காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று கூறினார்.

Tags :