Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமடைய கூடிய நிலைமை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமடைய கூடிய நிலைமை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Mon, 07 Nov 2022 10:00:41 AM

தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமடைய கூடிய நிலைமை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி: காற்றின் தரம் 326 .... டெல்லியில் சமீப நாட்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் வெளியே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சுவாச மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்து உள்ளன. மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது.

இதனையடுத்து இந்நிலையில், டெல்லியில் காற்று தர குறியீட்டு அளவில் காற்றின் தரம் 326 என்ற அளவில் இன்று காலை பதிவாகி உள்ளது. இது மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. கடந்த வாரம் கடுமையான பிரிவில் 3 நாட்களுக்கு நீடித்த இந்த நிலைமை சற்று மாறியுள்ளது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமடைய கூடிய நிலைமை ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

air quality in delhi , டெல்லி,காற்றின் தரம்

இதேபோன்று, டெல்லி என்.சி.ஆர். பகுதியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உள்ள நொய்டாவில் காற்று தர குறியீடு 356 (மிக மோசம் பிரிவில்) ஆக உள்ளது. குருகிராமில் காற்று தர குறியீடு 364 என தொடர்ந்து மிக மோசம் பிரிவிலேயே உள்ளது.

காற்று தர குறியீடு பூஜ்யம் முதல் 50-க்குள் இருப்பது நலம் எனவும் 51 முதல் 100 என்பது மித அளவிலும், 101 முதல் 150 வரை என்பது உடனடியாக பாதிப்பிற்கு இலக்காகும் குழுக்களுக்கு சுகாதாரமற்றது எனவும், 151 முதல் 200 வரை அனைத்து தரப்பினருக்கும் சுகாதாரமற்றது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 201 முதல் 300 வரை அதிக பாதிப்பு ஏற்படுத்தும் சுகாதாரமற்ற நிலை மற்றும் 301 முதல் 500 வரை மனித சுகாதாரத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :