Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்

வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்

By: Nagaraj Sun, 28 Aug 2022 09:27:49 AM

வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்

சீனா: இனி இல்லை வட்டியில்லா கடன்... நட்பு நாடான இலங்கை தவிர 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார்.

அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டுடன் இணைத்து சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

சீனாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார். 2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீன-ஆபிரிக்க ஒத்துழைப்புக்கான மன்றத்தின் அமைச்சர்கள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட 10 பில்லியன் டொலர்களில் 3 பில்லியனுக்கும் அதிகமான கடன் வசதிகள் ஆப்பிரிக்க நிதி மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆப்பிரிக்காவின் முன்னுரிமை திட்டங்களுக்கு கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

cooperation,exchanges,more resources,cooperation,china,projects ,ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள், அதிகள வளங்கள், ஒத்துழைப்பு, சீனா, திட்டங்கள்

ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய சீன இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது: “பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும், டக்கரில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்துவதில் சீனா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆப்பிரிக்க நிதி நிறுவனங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட $10 பில்லியன் கடன் வசதிகளில் $3 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

7 மாதங்களுக்குள், சீனாவின் பொருட்களுக்கான ஆப்பிரிக்க இறக்குமதி 70% ஆக அதிகரித்துள்ளது. சீன நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் $2.7 பில்லியன் முதலீடு செய்துள்ளன. ஆப்பிரிக்காவுக்கு 10 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை சீனா ஊக்குவிக்கும். இந்த ஆண்டு இதுவரை, சீனா தனது ஏற்றுமதியில் 98% வரிகளை தள்ளுபடி செய்ய 12 ஆபிரிக்க நாடுகளுடன் கடிதங்களை பரிமாறிக்கொண்டது. எத்தியோப்பியா, ஜிபூட்டி, சோமாலியா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு அவசரகால உணவு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

1,000 கிராமங்களில் உள்ள 100 நிறுவனங்களுக்கு விவசாயத் துறையில் முதலீட்டை அதிகரித்து, வறுமையைக் குறைக்கவும், ஆபிரிக்காவில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் வேலைகளை உருவாக்கவும் சீனா தொடர்ந்து உதவும். ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக அதிக வளங்களைத் திரட்டுவோம்

டக்கர் உச்சி மாநாட்டிற்குப் பிறகு, செனகலில் உள்ள ஃபோண்டிகன் பாலம், நைரோபி எக்ஸ்பிரஸ்வே, கமரூனில் உள்ள கிரிபி லோலாபே எக்ஸ்பிரஸ்வே, எகிப்தில் ரமலான் எல்.ஆர்.டி. இலகு ரயில் பாதை போன்ற பல முக்கிய திட்டங்களை சீனா ஏற்கனவே செய்து முடித்துள்ளது.

ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக அதிக வளங்களைத் தொடர்ந்து திரட்டுவோம். சீன மற்றும் ஆபிரிக்க மக்களுக்கு இடையேயான நட்புறவை ஆழமாக்குவதற்கும், பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவோம்."எனத் தெரிவித்தார்.

Tags :
|