Advertisement

விண்ணில் ஏவ சந்திராயன் 3 தயாராக உள்ளது என்று தகவல்

By: Nagaraj Thu, 29 June 2023 11:39:44 PM

விண்ணில் ஏவ சந்திராயன் 3 தயாராக உள்ளது என்று தகவல்

புதுடெல்லி: சந்திராயன்-3 தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சந்திரயான்-3 ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.

சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியாக சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதற்கிடையில் விண்கலத்தின் சோதனை நடந்து கொண்டிருந்தது.

chandrayaan 3.,launched,july 13 - isro chief information,ready to go to the moon , சந்திரயான்-3, ஜூலை 13, விண்ணில், ஏவப்படும்

சந்திரயானை ஏற்றிச் செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் சோதனையும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு செல்ல தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும். இந்தியாவின் அதிக எடை கொண்ட மார்க்-3 ராக்கெட்டின் உதவியுடன் இந்த விண்கலம் ஏவப்படவுள்ளது.

Tags :